Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்



இலையுதிர் கால மரங்களைப்போல் நாட்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் வாழ்வில், ஞாபகங்களின் வழியே உயிர்த்தெழும் இறந்த கால வாழ்வின் சாட்சியாய் இருப்பது நீ மட்டுமே.. !


மழை பெய்து கொண்டிருக்கும் என் மனதின் தெருக்களில் உன் காலடித் தடங்கள் குளங்களைப் போல் இருக்கின்றது.

Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

கடவுளும் அவளும் கல் ஆனதால் காதலும் நானும்  பட்டாம்பூச்சி ஆகிறோம்.