என் தேவை, என் வாழ்வு என்று எல்லாம் தனியாகிப் போனதில் வருத்தமேதும் இல்லை என்றாலும், சற்றுநேரம் சலனமற்று இருக்கும் போதெல்லாம், உன் நினைவென்னும் குளத்தை சுற்றியே நடந்திருக்கிறேன் ஒரு துறவியைப் போல. வண்ணத்துபூச்சியின் சிறகைப் போன்றவள் நீ.. நான் பூக்களை திறந்து வைத்திருக்கும் காட்டைப் போன்றவன். பறத்தலும் இருத்தலும் உன் விருப்பம் சார்ந்தது. 18:09:2015 பட்டாம்பூச்சிக் கதைகள்