இனி எந்தக் கடவுளாலும்
பிறிதொரு மனிதனாலும்
தரவியலாப்
பின் மதியப் பொழுதொன்றில்..
பின்வாசல் மழைவீதியில்
ஐந்தே நிமிடம் நடந்தேன் ..
இல்லை..
"கடந்தேன் கடந்தேன் கடந்தேன்"..
"சொல்லொன்றில் தீராப்
பொருள்கொண்ட
வாழ்வன்றோ வரம்"
இவன்
காமம் துறந்த ராவணன்
ஆன கதையை
இனி அந்த ராமனுக்குச் சொல்..!
Comments
Post a Comment